கமல் தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன் படம்

‘சேயோன்’ – சிவகார்த்திகேயன், சக்திவாய்ந்த ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு, அவருடன் பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடிக்கும், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 18 மே 2026 அன்று மதுரையில் தொடங்கியுள்ளதாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ திரைப்படம், அதிரடி, உணர்வுபூர்வமான தருணங்கள் மற்றும் குடும்பம் சார்ந்த கதைக்களத்தோடு, கிராமியப் பின்னணியில் ஒரு சிறப்பான பொழுதுபோக்குத் திரைப்படமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் நேரில் கலந்துகொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்து, அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். படத்தின் நடிகர்கள், படக்குழுவினர், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்ட ஒரு தொடக்க விழாவாக இது அமைந்தது.

அமரன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் மீண்டும் ஒருமுறை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் கைகோர்ப்பது ஒரு குறிப்பிடத்தக்க மறுஇணைவாக அமைகிறது. கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் ஆகியோரால் தயாரிக்கப்படும் இத்திரைப்படம், ஒரு வலிமையான படைப்புக் குழுவையும், ஈர்க்கக்கூடிய ஒரு கலைப்பார்வையையும் ஒன்றிணைக்கிறது.

சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் முதல் முறையாக, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் இணையும் படைப்பாக ‘சேயோன்’ திரைப்படம் அமைந்துள்ளதால், இத்திரைப்படத்தின் இசைக்கும், மொத்த திரைப்பட அனுபவத்திற்கும் பெரும் ஆவல் உள்ளதுடன், 2026-ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரையரங்கு வெளியீடுகளில் ஒன்றாகத் திகழ உள்ளது.

 

ஆர்.மகேந்திரன்இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்கமல்ஹாசன்சிவகார்த்திகேயன்சேயோன்ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்
Comments (0)
Add Comment