வரும் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் பிரத்யேக காட்சிகள் அண்மையில் நடைபெற்றது. இதில், விஷ்ணு மஞ்சு, மதுபாலா, இயக்குநர் முகேஷ் குமார் சிங், படத்தொகுப்பாளர் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.
கண்ணப்பா படத்தின் பிரேத்யக காட்சிகளை பார்த்த பத்திரிகையாளர்கள் நடிகர் விஷ்ணு மஞ்சு உள்ளிட்ட படக்குழுவை வெகுவாக பாராட்டினார்கள். குறிப்பாக, நியூசிலாந்தில் படமாக்கப்பட்ட காட்சிகள், இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படத்திலும் காட்டாத லொக்கேஷன்களாக இருக்கிறது. முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் கதை சொல்லாமல், இதுபோன்ற லொக்கேஷன்களில் காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பது, நிச்சயம் ரசிகர்களை கவரும், என்று பத்திரிகையாளர்கள் பாராட்டினார்கள்.
நிகழ்ச்சியில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஷெல்டன், அவர் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறார். நான் இரண்டாவது யூனிட்டாக பணியாற்றியிருக்கேன். ஏன் என்றால், என் சகோதரர் விஷ்ணுவுக்காக தான். அவர் தான் என்னை தெலுங்கு சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினார். அவருடைய ஐந்து படங்களுக்கு நான் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கேன், அவருக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன்.
படத்தொகுப்பாளர் ஆண்டனி …,
நடிகர் சம்பத்ராம் …,
அதன் பிறகு ‘கண்ணப்பா’ படத்திற்காக அவரே என்னை அழைத்தார். அடுத்த ஒரு படம் நியூசிலாந்தில் படப்பிடிப்பு, தேதி இருக்கா என்று கேட்டார். நீங்க சொன்னா வருவேன் என்று சொல்லி இந்த படத்தில் நடித்தேன். இதில் எனக்கு மிகப்பெரிய கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள். அந்த காளஹஸ்திரி சிவபெருமான் மூலம் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாக நினைக்கிறேன். எனக்கு ஒத்துழைப்பு கொடுத்து என்னை சிறப்பாக நடிக்க வைத்திருக்கிறார். நியூசிலாந்தில் என்னை நல்லபடியாக பார்த்துக் கொண்டார். சரத்குமார் சார், மதுபாலா மேடம் ஆகியோருக்கு இணையாக என்னையும் நடத்தினார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வந்திருக்கிறது, நிச்சயம் மக்களை வெகுவாக கவரும். படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.
நடிகர் அர்பித் ராணா …
இயக்குநர் முகேஷ் குமார் சிங்…
நடிகை மதுபாலா பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், நிறைய விசயங்கள் சொல்ல வேண்டும் என்று நினைத்து, எதுவும் சொல்ல முடியாமல் போகும். அப்படி ஒரு நிலையில் தான் நான் இருக்கிறேன். இந்த படம் பண்ணுவதற்கு என்னை சிவன் தான் தேர்வு செய்தார், என்று விஷ்ணு சார் நேர்காணலில் சொன்னார். அதுபோல தான் நானும். சிறு வயதில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். யார் படத்தில் நடிக்க வேண்டும், அறிமுகம் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் யோசிக்காமல், எதுவுமே தெரியாம நடிக்க வந்தவள் நான்.
இந்த படத்தின் மூலம் சிறந்த நட்பு எனக்கு கிடைத்திருக்கிறது. விஷ்ணு உடன் இணைந்து பயணித்தது மகிழ்ச்சி. கதையாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் கண்ணப்பாவாக விஷ்ணு மஞ்சு சிறப்பாக பங்களித்திருக்கிறார். இயக்குநர் முகேஷ் குமார் சிங் மிக அமைதியானவர், அவரது பணி மிக சிறப்பாக இருக்கிறது. ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. நடிகர் சம்பத் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். இந்த சிறப்பான ஒரு படக்குழுவினருடன் மகிழ்ச்சியாக பணியாற்றியேன். இந்த படத்தின் காட்சியை பார்த்த நீங்கள் வியந்திருப்பீர்கள், என்று நினைக்கிறேன். படமும் மக்களை வியக்க வைக்கும், என்று நம்புகிறேன்.
இளம் அம்மா என்ற இமேஜ் எனக்கு இருக்கிறது, தற்போது அந்த இமேஜை கண்ணப்பா படம் உடைத்து, போர் வீராங்கனை என்ற புதிய பிம்பத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. நான் அந்த கதாபாத்திரத்தில் மிக மகிழ்ச்சியாக நடித்தேன். நமக்கு பலர் மீது பல கோபங்கள் இருக்கும், ஆனால் அந்த கோபத்தை வெளிக்காட்ட முடியாது. இந்த படத்தில் சண்டைக்காட்சியில் எனக்கான கோபத்தை வெளிக்காட்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த கத்தியை என்னிடம் கொடுத்து அடிக்க சொல்லியதும், எதிரே வந்த அனைவரையும் அடித்து துவம்சம் செய்து விட்டேன்.
நாயகன் விஷ்ணு மஞ்சு பேசுகையில், “சமீபகாலமாக சில சர்ச்சையான சம்பவங்கள் நடப்பதை நீங்கள் அறிவீர்கள். அதைப்பற்றி நான் இங்கு பேச விரும்பவில்லை. அதே சமயம், என்ன நடந்தது? என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். கண்ணப்பா பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ளது. படத்தின் கிராபிக்ஸ் பணிகள் உலகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. லண்டன் மற்றும் துபாய் நாடுகளிலும், இந்தியாவில் 8 இடங்களிலும் பணிகள் நடக்கிறது. பொதுவாக படத்தின் காட்சிகள் அடங்கிய டிரைவ் இரண்டு காப்பிகள் எடுக்கப்படும்.
‘கண்ணப்பா’ திரைப்படத்தை பொறுத்தவரை இதுவரை கண்ணப்பா பற்றி வந்திருக்கும் படங்களை விட மிக வித்தியாசமான அதே சமயம் பிரமாண்டமான படமாக இருக்கும். குறிப்பாக கண்ணப்பா சிவன் பக்தராக மாறிய பிறகு என்ன நடந்து என்பதை தான் அனைத்து படங்களும் காட்டியிருக்கிறது. ஆனால், சிவ பக்தர் ஆவதற்கு முன்பு அவரது வாழ்க்கை எப்படி இருந்தது? என்பதை இந்த படத்தில் பார்க்கலாம். அதை சாதாரண படமாக அல்லாமல் விஷுவல் விருந்தாக பார்க்கும் அளவுக்கு படத்தை மிக பிரமாண்டமாக எடுத்திருக்கிறோம். நிச்சயம் இந்திய சினிமாவில் கண்ணப்பா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
படம் தொடர்பாக ஏகப்பட்ட கேள்விகள் எழலாம், ஆனால் வரலாறு மற்றும் இதிகாசங்கள் என்ன சொல்கிறதோ அதை தான் காட்சிகளாக எடுத்திருக்கிறோம். தணிக்கை குழுவினர் ஏகப்பட்ட கேள்விகளை முன் வைக்க உள்ளார்கள், குறிப்பாக கண்ணப்பா தனது வாயில் தண்ணீர் எடுத்து லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது, வட இந்தியாவில் ஏற்க மாட்டார்கள், என்று சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் அப்படித்தானே இருக்கிறது, உண்மையை தானே நாங்கள் காட்சியாக எடுத்திருக்கிறோம், என்று வாதிட்டேன். இதைவிட பெரிய விசயம், காதல் பாடலை பார்த்துவிட்டு, கண்ணப்பா காதலித்தாரா? என்று கேட்கிறார்கள்.
ஷெல்டன் சாவு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஸ்டீபன் தேவஸி இசையமைத்துள்ளார். ஆண்டனி படத்தொகுப்பு செய்திருக்கிறார். 24 பிரேம்ஸ் ஃபேக்டரி, ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில் மோகன் பாபு தயாரித்திருக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வரும் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.