மஹாகாளி – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு

3

பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ் (PVCU)-இன் மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த திரைப்படமான ‘மஹாகாளி’, 125 நாட்கள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. RKD Studios சார்பில் ஆர்.கே. துக்கல் மற்றும் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கும் இப்படத்தில், பிரசாந்த் வர்மா கிரியேட்டராகவும், பூஜா அபர்ணா கொல்லுரு இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.

 புராணக் காவியமாக உருவாகி வரும் இப்படம், IMAX வடிவத்திற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. கண்கவர் காட்சியமைப்புகள் மற்றும் அசத்தலான பெரிய திரை அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

படப்பிடிப்பில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக, நடிகர் ரோஹித் சராஃப் தனது கதாபாத்திரத்திற்கான அனைத்து காட்சிகளின் படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளார். ஏற்கனவே சுக்ராச்சார்யா கதாபாத்திரத்தில் நடித்துள்ள அக்ஷய் கன்னா, தனது பகுதிகளின் படப்பிடிப்பை முடித்திருந்தார்.

பூமி ஷெட்டி, ‘மஹாகாளி’ என்ற டைட்டில் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தெய்வீகமும் உக்கிரமும் கலந்த அவரது ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதேபோல், சுக்ராச்சார்யாவாக அக்ஷய் கன்னாவின் தோற்றமும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பல்வேறு திரைப்படத் துறைகளைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள இப்படம், ஆன்மீக பிரம்மாண்டத்தையும் நவீன திரைப்படத் தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் உருவாகி வருகிறது. சமீப காலங்களில் உருவாகும் மிகவும் லட்சியமான புராண திரைப்படங்களில் ஒன்றாக ‘மஹாகாளி’ பார்க்கப்படுகிறது.

தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், தயாரிப்புப் பணிகளை நிறைவு செய்து, விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்குச் செல்ல படக்குழு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. ‘மஹாகாளி’ குறித்து வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது.

 

படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் புரமோஷன் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.